Monday, May 31, 2010

காதலித்து பார்...

காதலித்து பார்...
கண்கள் குருடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்

காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்

காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்

காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்

காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு

காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......



http://www.kavinila.com/

No comments:

Post a Comment

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...